சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

Date:

நிலாவெளியில் வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4.5 கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்ய தயாராக இருந்த 4 வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களை கையாளும் அதிகாரிகள், திருகோணமலை மற்றும் அனுராதபுரம் உதவிப் பணிப்பாளர்களின் வழிகாட்டலின் கீழ், ஹொரவ்பொத்தானை தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் வவுனியா மற்றும் இறக்கக்கண்டி பகுதிகளைச் சேர்ந்த 33, 39 மற்றும் 45 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் வலம்புரி சங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த நிலையில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அவர்கள் மீது முழுமையான விசாரணையை முன்னெடுத்து, இது தொடர்பான அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேகரித்துள்ளது.

இன்று (11) அவற்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், நீதவான் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் சரீரப்பிணை விதித்து, மார்ச் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வனநில மற்றும் விலங்குகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்