ரணில் வென்றிருக்காவிட்டால் நிறைவேற்றதிகாரம் ஒழிந்திருக்கும்!

Date:

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படாமலிருந்தால், நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் கடைசி நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தானும் தனது குழுவினரும் சர்வகட்சி அரசாங்கத்துக்காக குரல் எழுப்பியதாகத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் எதிரணியில் அமரவும் தமது அணி தயங்கப்போவதில்லை என்றும் அழஹப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்