பிரதமர் பதவியேற்கும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்!

Date:

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் எம்.பி திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சி தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளுக்கு இணங்க செயற்பட்டால் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க இணங்கியதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதிகள் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும் சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க விளக்கினார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்