வருமான வரியை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய வரவு செலவுத் திட்டம் இனி யதார்த்தமானது அல்ல எனவும், எனவே வருமான வரியை அதிகரிக்கும் புதிய வரவு செலவுத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
“சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் சமுதாயம் சரிந்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரி வருவாய் சுமார் 15 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்” என்று அலி சப்ரி கூறினார்.




