மரியுபோலை கைப்பற்றியது ரஷ்யா: ஒரு ஈ கூட தப்பிக்கக்கூடாதென புடின் உத்தரவு!

Date:

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அங்குள்ள பரந்து விரிந்த அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை பகுதியில் மட்டும் உக்ரைன் இராணுவத்தினர் தங்கியுள்ளனர்.

இந்த ஆலையை தாக்க வேண்டாம் என்றும், மாறாக யாரும் தப்பிகாத விதத்தில் சுற்றிவளைத்து வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.

“ஒரு ஈ கூட தப்பிக்க முடியாதபடி இந்த தொழில்துறை பகுதியைத் தடுக்கவும்” என்று புடின் ஒரு தொலைக்காட்சி கூட்டத்தில் கூறினார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குவின் கூற்றுப்படி 2,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய படைவீரர்கள் இரும்பு ஆலையின் அடித்தளத்திற்குள் பதுங்கியுள்ளனர்.

ரஷ்யா படைகள் மரியுபோலை கைப்பற்றினாலும் மூன்று ரஷ்ய டாங்கிகளையும் மேலும் மூன்று ஆயுதமேந்திய வாகனங்களையும் உக்ரைனிய படையினர் அழித்ததாகக் கூறுகின்றனர். உக்ரைனின் தீவிர வலதுசாரி அசோவ் பட்டாலியன் டெலிகிராமில் ஒரு சுருக்கமான அறிக்கையில், “தற்போதைய சூழ்நிலை இருந்தபோதிலும்” வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று கூறியது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்