க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளை திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பெபப்ரவரி 4ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மூட வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலைஅமைப்பில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
ஜனவரி 10 ஆம் திகதி அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க அரசு எடுத்த முடிவு, மாணவர்களிடையே வைரஸ் பரவலை அதிகரித்தது என்றார்.
அனைத்துப் பாடசாலைகளும் பெப்ரவரி 4ஆம் திகதி மூடப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.




