இலங்கையில் நேற்று (20) 195 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கிறது.
98 ஆண்களும் 97 பெண்களும் மரணித்ததாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.
மரணித்தவர்களில் 43 பேர்- 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்-30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
151 நபர்கள்- 72 ஆண்கள் மற்றும் 97 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.



