யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகள், அவசர சிகிச்சை பிரிவு, கோப்பாய் சிகிச்சை மையம் நிறைந்தன; ஒட்சிசன் தட்டுப்பாடு; சடலங்கள் தேங்கியுள்ளன; விபத்து பிரிவில் தினமும் 80 பேர்! (VIDEO)

Date:

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகள், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, கோப்பாய் இடைநிலை சிகிச்சை மையம் என்பன நோயாளர்களால் நிறைந்து விட்டது. இந்த நிலையில் விபத்து, குழு மோதல்களால் தினமும் 70-80 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது பெரிய சுமையாக உள்ளது.

இதுவரை ஒட்சிசனை பெற்ற அனுராதபுரத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் தேங்கிக் கிடக்கின்றன என தெரிவித்துள்ளார் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறிபவானந்தராஜா.

இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளர்களால் நிறைந்துள்ளது.

கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெரும் நெருக்கடியை சந்திக்கிறோம். கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 420 பேரே தங்கி சிகிச்சை பெற முடியும். ஆனால் இன்று 430 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.இதுவரை அனுராதபுரத்திற்கு தினமும் வாகனங்களை அனுப்பி ஒட்சிசனை பெற்றோம். ஆனால் அனுராதபுரத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நேற்று முதல் கொழும்பிற்கு வாகனங்களை அனுப்புகிறோம்.

யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை கோம்பையன் மயானத்தில்தான் தகனம் செய்யும் வசதியுண்டு. தினமும் 4 சடலங்களை மட்டுமே அங்கு கொண்டு செல்ல முடியும். கடந்த 5 மாதங்களில் யாழ் போதனா வைத்தியசாலையில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேர் உயிரிழந்தனர். தகனம் செய்ய திகதி பெற முடியாமல் வைத்தியசாலையில் பல உடல்கள் தேங்கியுள்ளன என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பெண்களிற்கு கைத்துப்பாக்கியை நீட்டி வீரம் காட்டிய அர்ச்சுனா: நீதிமன்ற உத்தரவை மீறிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி...

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்