29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் செல்லமாக வளர்த்த நாய் உயிரிழந்த சோகத்தில் 5 நாள் சாப்பிடாமல் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

வட்டுக்கோட்டையில் சம்பவம் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் covid-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (61) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.

அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளது. அந்த சோகத்தில் வயோதிபப் பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் வெளிநோயாளர் பிரிவில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.

அவரது சடலம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment