யாழில் செல்லமாக வளர்த்த நாய் உயிரிழந்த சோகத்தில் 5 நாள் சாப்பிடாமல் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

Date:

வட்டுக்கோட்டையில் சம்பவம் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் covid-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (61) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.

அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளது. அந்த சோகத்தில் வயோதிபப் பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் வெளிநோயாளர் பிரிவில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.

அவரது சடலம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்