வடக்கிற்குள் நுழைந்தவர்கள் நள்ளிரவில் வழிமறிக்கப்பட்டு பரிசோதனை!

Date:

தென்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்தவர்களை ஏ9 பிரதான நுழைவாயிலில் பொலிசாருடன் இணைந்து வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தென்பகுதியில் இரவு வேளைகளில் வவுனியாவிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருவதையடுத்து, அதனை வவுனியா மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம், அலுலக தேவை போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களின் பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்