விபத்து சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் பயணித்த வாகனம் கண்டி- குருநாகல் வீதியில் உள்ள நுகவெல பிரதேச செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த 18 வயதுடையவர் காயமடைந்த நிலையில் பெரதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.



