25.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இந்தியா

ரூ.5 லட்சம் தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’!

தற்போது முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கும் அறிவுறுத்தி வருகிறது. இதில் முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. எனவே பலரும் இதில் புதுமையை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற அந்த பிரமுகர் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முகக்கவசத்தை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருவது அந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இவரை உள்ளூர்வாசிகள் ‘தங்க பாபா’ என்றே அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

வங்காள விரிகுடாவில்  நிலநடுக்கம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!