வங்காள விரிகுடாவில் இன்று (25) காலை 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 91 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதோடு, அதன் அதிர்வுகள் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.



