தடுப்பூசி செலுத்திய நிலையில் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இரண்டு யுவதிகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இன்று, ஆடைத்தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சாவகச்சேரியிலுள்ள இரண்டு யுவதிகள், ஒவ்வாமை காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



