உலகம்

ஒரே நபரை கரம் பிடிக்கப்போகும் இரட்டை சகோதரிகள்!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அனா மற்றும் லூசி, இருவர்கள் இருவக்கும் 35 வயதாகிறது. இவர்கள் இருவரும் பென் ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளது. ஆம் இருவரும் பரஸ்பரம் தெரிந்தே ஒருவரை திருமணம் செய்தனர். இந்நிலையில் இவர்கள் அந்நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பென், ஆனா மற்றும் லூசிக்கு ஒரே நேரத்தில் பிரபோஸ் செய்தார். இந்த சம்பவம் வைரலாக நடந்து வருகிறது.

37 வயதான பென் இந்த நிகழ்ச்சியில் முதலில் அனா மற்றம் லூசியை ஆஸ்திரேலயாவில் உள்ள ஒரு பிரபலமான பார்க்கிற்கு அழைத்து செல்கிறார். அங்கு ஒரு மரத்தடியில் அமர வைக்கிறார். அங்கு அவர்களுக்கான கேண்டில் லைட் சிட்டிங் ஏற்பாட செய்யப்பட்டிருந்தது. அப்பொது பென் தனது பாக்கெட்டிலிருந்து 3 மோதிரம் கொண்ட நகையை பெட்டியை எடுத்து திறந்து அவர்கள் முன் நீட்டி “அனா, நீ எனக்கு இந்த உலகிலேயே மிக முக்கியமானவள், நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். லூசி நீ எனக்கு இந்த உலகின் மிக முக்கியமானவள், நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வேன். இந்த மோதிரம் நமது இணைப்பிற்கு சாட்சியாக இருக்குமா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு இருவரும்” நாங்களும் உன்னை காதலிக்கிறோம். இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் பெற்ற இரட்டையர்கள் நாங்கள். எங்களுக்கு பிடித்தவரை எங்களுக்குள் ஷேர் செய்யவிருக்கிறோம்” என கூறினர்.

இது குறித்து பென் கூறியபோது : “ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வது சட்ட விரோதம். ஆனால் வெளிநாடுகளில் சாத்தியம். மலேசியா, இந்தோனேஷியா, அமெரிக்காவின் சில பகுதிகளில் இதற்காக சட்டம் உள்ளது. அங்கு சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். ” என கூறினார்.

இவர்கள் 3 பேரும் கடந்த 2012ம் ஆண்டு முதலே டேட்டிங் செய்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியில் சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லைசன்ஸ் கேட்ட பொலிஸ்காரருக்கு சட்டையை இறக்கி காண்பித்த இளம்பெண்!

Pagetamil

‘உக்ரைனுக்காக போரிட மேற்குலகம் விரும்பினால் நாங்களும் ரெடி’: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Pagetamil

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்!

Pagetamil

‘என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்’: பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

Pagetamil

லத்வியாவுக்குள் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

Pagetamil

Leave a Comment