அவிசாவளை, ஹன்வெல மற்றும் நாகலகம் வீதி பகுதிகளில் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் இந்த பகுதிகளில் வெள்ளம் பரவத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவிசாவளை, சீதாவாக்க, பியகம, கொலன்னாவ, களனி, கடுவெல மற்றும் தொட்டலங்கா பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.
அத்துடன், அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் உயர்வு அத்தனகல, கம்பஹா, மினுவாங்கொட மற்றும் ஜா-எலவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1