யாழில் மேலும் 4 கொரோனா மரணங்கள்: மன்னாரில் 39 வயதானவர் மரணம்!

Date:

யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்ச பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைநகரை சேர்ந்த 45 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குருநகரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். 71 வயதான அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

மன்னாரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்