இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவம் தொடர்கிறது: காசாவில் பேரவலம்;சர்வதேச ஊடக நிறுவன அலுவலகமும் தகர்ப்பு!

Date:

பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த அகதிகள் முகாமில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த குழந்தையின் தாயாரும் கொல்லப்பட்டார். அவரது கணவர், மனைவிக்கு இறுதிவிடை கொடுக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள் ருவிற்றரில் பகிரப்பட்டு வருகிறது.

அதேநபர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது குழந்தையை சந்திக்கும் வீடியோவும் வெளியாகியது.

இதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள்.

அத்துடன், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், அலுவலகங்கள் இயங்கிய அடுக்கு மாடி கட்டிட தொகுதியின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்