கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சம்; தேசிய அளவில் முழு ஊரடங்கை அமுல்படுத்திய மலேசிய அரசு!

Date:

கொரோனா மூன்றாவது அலை காரணமாக தேசிய அளவிலான முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் மொத்தம் 4,44,484 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,700 பேர் பலியாகியுள்ளனர். கடந்த திங்கள் அன்று புதிதாக 3,807 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 37,390 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மூன்றாவது அலை அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ்களும் வேகமாக பரவும் சூழல் உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தேசிய அளவிலான முழு ஊரடங்கை அமுல்படுத்தி மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியா கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது.

இது தேசிய அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ்களும் அதிகப்படியான தொற்று விகிதத்தை உண்டாக்கி வருகின்றன. இவை பொது சுகாதார கட்டமைப்பிற்கு கடும் சவாலை அளித்திருக்கிறது. எனவே முழு ஊரடங்கு மிகவும் அவசியமாக உள்ளது.

அதன்படி சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரம்ஜான் பண்டிகை வரவுள்ள நிலையில் முழு ஊரடங்கு இஸ்லாமியர்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மசூதிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டும் ஒரேசமயத்தில் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்