கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்த நபரிடம் உரிய ஆவணம் கேட்ட பொலீஸ் ; ஆவணமாக ஐந்தடி பாம்பை காட்டிய நபர் – தெறித்து ஓடிய பொலீசார்!

Date:

கர்நாடக மாநிலத்தில், ஆவணம் கேட்ட போலீசாரிடம் ஐந்தடி பாம்பை காட்டி பதற வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரில், காவல் துறையினர் முறையான ஆவணங்களைக் கேட்ட போது, பிடித்து வந்த நல்லப் பாம்பை சாட்சியாக நபர் ஒருவர் காட்டிய சம்பவம், திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியமின்றி வெளியே சுற்றித் திரிவோரைப் பிடிக்க, பல்வேறு இடங்களில், சோதனைச் சாவடி மையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மைசூர் மாளிகை அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி, அதிகாரிகள் விசாரித்தனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வந்ததாகக் கூறிய அந்த இளைஞரிடம், காவல் துறையினர் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கறாராக கேட்டுள்ளனர்.

குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளை மீட்கும் வீரரான அந்த இளைஞர், வேறு வழியின்றி, பிடித்து வந்த நல்லப் பாம்பையே இரு சக்கர வாகனத்தில் இருந்து ஆவணமாக எடுத்துக் காட்டினார்.

ஆவணங்களைக் கேட்ட அதிகாரிகள், சுமார் ஐந்தடி பாம்பைக் கண்டதும், ஐந்தடி தூரம் தெறித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

https://twitter.com/i/status/1392056436230823939

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்