இலங்கையில் நேற்று முதல் முறையாக ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று 2,672 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 2,659 பேர் புத்தாண்டு nகாத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இலங்கையின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 125,906 ஆக அதிகரித்தது.
சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 20,000 ஐ கடந்தது, இது கடந்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் தொற்று பரவ ஆரம்பித்ததன் பின்னர் ஒரே சமயத்தில் 20,000 இற்கும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.




