பெல்ஜியத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரான்ஸ் எல்லையை சுமார் ஏழரை அடி நகர்த்தியது சர்வதேச அளவில் பூதாகரமாகியுள்ளது.
எல்லை கிராமமான எர்குவெலின்ஸில் உள்ள விவசாயி தனது டிராக்டர் பயணிப்பதற்கு தடையாக இருப்பதாக, எல்லை கல்லை நகர்த்தி வைத்து விட்டார்.
அவர் அறியாமல் செய்த விவகாரம் இப்பொழுது விஸ்பரூபம் எடுத்துள்ளது.
பிரெஞ்சு-பெல்ஜிய எல்லை 1820 கோர்ட்ரிஜ்க் ஒப்பந்தத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டது. 1819 ஆம் ஆண்டில் எல்லை முதன்முதலில் அமைக்கப்பட்டபோது கல் முதலில் அங்கு வைக்கப்பட்டது.
எல்லை கிராமமான எர்குவெலின்ஸில் உள்ள விவசாயி தனது டிராக்டர் பயணிப்பதற்கு தடையாக இருப்பதாக, எல்லை கல்லை 7.5 அடிக்கு நகர்த்தியதால் பிரான்ஸ் 1000 சதுர அடி நிலத்தை இழந்தது.
அந்த கல்லை மீண்டும் பழைய இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எர்கெலின்ஸ் நகரின் மேயரான டேவிட் லாவாக்ஸ் தெரிவித்தார்.
விவசாயி கல்லைத் திருப்பி சரியான இடத்தில் வைக்கும்படி கேட்கப்படுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த விவகாரத்தை பெல்ஜிய வெளிவிவகார அமைச்சே முடித்து வைக்க வேண்டும்.
அத்துடன், 1930 முதல் செயலற்று காணப்படும் பிரான்ஸ் -பெல்ஜிய எல்லை ஆணைக்குழு மீண்டும் கூடி, எல்லைக்கல் சரியான இடத்தில் வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.




