29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

வடமராட்சி முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை சுகாதார பிரிவைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

புலோலி வட கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 16ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லையென்பது உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment