மயிரிழையில் தவிர்க்கப்பட்ட புகையிரத விபத்து!

Date:

நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரியும், சைகை காண்பிக்கும் உத்தியோகத்தரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

நேற்றிரவு சரக்கு புகையிரதமும், பயணிகள் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் நிலைமையேற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கண்டிக்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு புகையிரதம், இரவு 7.30 மணியளவில் நாவலபிட்டி நிலையத்தின் முதல் மேடையில்  நிறுத்தப்பட்டிருந்தது, பல பெட்டிகளும் சேர்க்கப்பட்டன.

இரவு 8:40 மணியளவில் மற்றொரு பயணிகள் புகையிரதம் முதல் மேடையில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தை அடைந்தது.

ஏற்கனவே புகையிரதமொன்று நிறுத்தப்பட்டுள்ளதை அவதானித்த, பயணிகள் புகையிரத சாரதி, சாதுரியமாக செயற்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்திற்கு சில அடி தொலைவில் புகையிரதத்தை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.

அந்த சமயத்தில் இரண்டு புகையிரதங்களிலும் பயணிகள் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...

ஆற்றில் மிதந்த கூலிப்படை உறுப்பினரின் சடலம்

கின் ஆற்றில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும், கால்கள் ஒரு கொங்கிரீட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்