பருத்தித்துறையில் 9 வயது சிறுமிக்கு கொரோனா!

Date:

வடமாகாணத்தில் இன்று (16) மூன்று பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்.

யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று 717 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமி என்றும் அவர் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதேவேளை யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பியுள்ள யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மன்னாரிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் நோயாளர் காவு வண்டி மூலம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்