சமூக ஊடகங்களில் உலாவிய போலி பொலிஸ்காரன் கைது!

Date:

சமூக ஊடகங்கள் மூலம் உப பொலிஸ் பரிசோதகராக நடித்து வந்த ஒருவர் நேற்று இரவு (15) பன்னிப்பிட்டி, பொல்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.

சந்தேகநபர் இன்று (16) நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் ரூ .200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பொலிஸ் சீருடையில் எடுத்த புகைப்படங்களை வட்ஸ்அப், எமோ, வைபர் மற்றும் முக புத்தகத்தில் பதிவிட்டு, தன்னை உப பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு வந்துள்ளார்.

ரக்வாணை பகுதியை சேர்ந்த 35 வயதான நபர்,  கட்டிட கட்டுமானத் துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு ஏதேனும் குற்றத்தில் தொடர்புபட்டுள்ளாரா என்று கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்