பருத்தித்துறையில் 9 வயது சிறுமிக்கு கொரோனா!

Date:

வடமாகாணத்தில் இன்று (16) மூன்று பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்.

யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று 717 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமி என்றும் அவர் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதேவேளை யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பியுள்ள யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மன்னாரிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் நோயாளர் காவு வண்டி மூலம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு

மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்...

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்