வடமாகாணத்தில் இன்று (16) மூன்று பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்.
யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று 717 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒருவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமி என்றும் அவர் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அதேவேளை யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பியுள்ள யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மன்னாரிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் நோயாளர் காவு வண்டி மூலம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



