‘என் மகன் விடயத்தில் குறுக்கே வந்தால் உங்கள் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள்’: மட்டக்களப்பு ஆசிரியையின் மிரட்டல்!

Date:

மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனிற்கும் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

https://soundcloud.com/pagetamilmedia/438555000701827a

அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார்.

தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள். எனது கணவர் என்ன செய்வார் தெரியுமாஎன அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். அந்த உயரதிகாரி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் (கருணா) நெருக்கமானவர் என குறிப்பிடப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்