Pagetamil
கிழக்கு

‘என் மகன் விடயத்தில் குறுக்கே வந்தால் உங்கள் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள்’: மட்டக்களப்பு ஆசிரியையின் மிரட்டல்!

மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனிற்கும் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார்.

தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள். எனது கணவர் என்ன செய்வார் தெரியுமாஎன அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். அந்த உயரதிகாரி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் (கருணா) நெருக்கமானவர் என குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக்கு அழைப்பு!

Pagetamil

வாழைச்சேனையில் மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

Pagetamil

மட்டக்களப்பில் காதலியை தாக்கிய பொலிஸ்காரர் கைது!

Pagetamil

மட்டக்களப்பு மாநகர முதல்வராக சிவம் பாக்கியத்தை நியமிக்க தீர்மானம்!

Pagetamil

Leave a Comment