இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை பெற ஒப்பந்தம்!

Date:

கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை 10 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை வாங்கும் என்று அரச மருந்துகள் கழகம் தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா திங்கள்கிழமை (15) ஒப்புதல் அளித்தார்.

திருத்தங்களுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் ஒப்பந்தம் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கும் இந்திய சீரம் நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா ஏற்கனவே 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

COVID-19 தடுப்பூசி, ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த அதிபர், துணை அதிபர் கைது

  அம்பலாந்தோட்டை தேராப்புத்த தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா கடந்த மே 21ஆம்...

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...

7,419 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்