யாழில் மேலும் 4 கொரோனா மரணங்கள்: மன்னாரில் 39 வயதானவர் மரணம்!

Date:

யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்ச பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைநகரை சேர்ந்த 45 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குருநகரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். 71 வயதான அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

மன்னாரை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்