புதுக்குடியிருப்பில் கத்திக்குத்திற்கு இலக்காகி இளைஞன் பலி!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட  சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளஞ்ஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட  நீதிபதி ரி.சரவணராஜா இன்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு  பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு  பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பி சி ஆர் பரிசோதனைகளில்  கொரோனா தொற்று இல்லையெனில் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம்ஒப்படைக்கப்படும் தொற்று இனம்காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கமைய தகனம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி   பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும்  புதுக்குடியிருப்பு பொலிசார் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்