ஐ.நாவிற்கு இலங்கை விவகாரத்தை முதலில் கொண்டு சென்றது மஹிந்தவே!

Date:

இலங்கைக்குள்ளான விவகாரங்களை முதன்முதலில் சர்வதேச சமூகத்தின் முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவாலேயே கொண்டு செல்லப்பட்டது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் கிரியெல்ல, 1989 ல் காணாமல்போனோர் பட்டியலை உலகளாவிய சமூகத்திடம் சமர்ப்பித்து, இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிமுகப்படுத்தியது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தான் என்றும், உள் விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கும் அவரே பொறுப்பு என்றும் கூறினார்.

மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை பதினேழரை பக்கங்களை கொண்டது. அதில் வெறும் இரண்டரை பக்கங்களை மட்டுமே புலிகளுடனான மோதல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 15 பக்கங்கள் கோட்டாபய ஜனாதிபதியானதக் பின்னர் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் நாட்டில் சிறுபான்மையினர் மீதான அநீதிகள் குறித்தே பேசப்பட்டுள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்