மயிரிழையில் தவிர்க்கப்பட்ட புகையிரத விபத்து!

Date:

நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரியும், சைகை காண்பிக்கும் உத்தியோகத்தரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

நேற்றிரவு சரக்கு புகையிரதமும், பயணிகள் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் நிலைமையேற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கண்டிக்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு புகையிரதம், இரவு 7.30 மணியளவில் நாவலபிட்டி நிலையத்தின் முதல் மேடையில்  நிறுத்தப்பட்டிருந்தது, பல பெட்டிகளும் சேர்க்கப்பட்டன.

இரவு 8:40 மணியளவில் மற்றொரு பயணிகள் புகையிரதம் முதல் மேடையில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தை அடைந்தது.

ஏற்கனவே புகையிரதமொன்று நிறுத்தப்பட்டுள்ளதை அவதானித்த, பயணிகள் புகையிரத சாரதி, சாதுரியமாக செயற்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்திற்கு சில அடி தொலைவில் புகையிரதத்தை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.

அந்த சமயத்தில் இரண்டு புகையிரதங்களிலும் பயணிகள் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்