நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரியும், சைகை காண்பிக்கும் உத்தியோகத்தரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
நேற்றிரவு சரக்கு புகையிரதமும், பயணிகள் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் நிலைமையேற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கண்டிக்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு புகையிரதம், இரவு 7.30 மணியளவில் நாவலபிட்டி நிலையத்தின் முதல் மேடையில் நிறுத்தப்பட்டிருந்தது, பல பெட்டிகளும் சேர்க்கப்பட்டன.
இரவு 8:40 மணியளவில் மற்றொரு பயணிகள் புகையிரதம் முதல் மேடையில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தை அடைந்தது.
ஏற்கனவே புகையிரதமொன்று நிறுத்தப்பட்டுள்ளதை அவதானித்த, பயணிகள் புகையிரத சாரதி, சாதுரியமாக செயற்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்திற்கு சில அடி தொலைவில் புகையிரதத்தை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.
அந்த சமயத்தில் இரண்டு புகையிரதங்களிலும் பயணிகள் இருந்தனர்.




