23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

வெளிநாடுகளிலுள்ளவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 157 மில்லியன் ருபா திருடிய வவுனியா இளைஞன் கைது!

வவுனியா, வேப்பங்குளத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயது நபர் குற்றவியல் புலனாய்வுத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது தனியார் வங்கி கணக்கிற்கு ரூ. 17.2 மில்லியன் அமெரிக்காவிலிருந்து வைப்பு செய்யப்பட்டிருந்தது.

2020 ஏப்ரலில் அவரது பல வங்கிக் கணக்குகளிற்கு ரூ. 140 மில்லியன் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் அவரது கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 36 சந்தேக நபர்கள்  ஏப்ரல் 2020 முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனு தாக்கல்

east tamil

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கயிருந்த 2வது வெளிநாட்டு பெண்ணும் மரணம்!

Pagetamil

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

Leave a Comment