ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

Date:

ஹட்டன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த முதியவரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் உதவுமாறு திம்புளை பத்தன பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமராவதி என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவரை கருணாகரன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் தற்போது இல்லை.

இதனிடையே, வைத்தியசாலையில் அனுமதித்த கருணாகரன் என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், உயிரிழந்த முதியவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய...

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி நீக்கம்

அமெரிக்க கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பணிநீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்