அம்பிகைக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம்; பொலிசாருடன் தள்ளுமுள்ளு (VIDEO)

Date:

பிரித்தானியாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாரிற்கு ஆதரவாக கென்டன் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும், பிரித்தானிய காவல்த்துறைக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பிகை செல்வகுமாரின் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கலைக்க முயன்றபோது, அமைதியின்மை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்தனர். அவரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் பொலிசாரை சூழ்ந்தனர்.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.ாக்கப

இதேவேளை, பெண்ணொருவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, போராட்டக்காரர்கள் புலிக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

ஹாரோவின் கென்டன் வீதியில் இந்த போராட்டம் நடந்தது. எமக்கு நீதி வேண்டுமென அவர்கள் கோசமெழுப்பினர்.

போராட்டக்காரர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்