கமல், இளையராஜா, பாராதிராஜாவுக்கும் பால்கே விருது: பிரபலத்தின் வேண்டுகோள்!

Date:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா ஆகியோர்களும் தாதாசாகிப் பால்கே விருதுக்கு தகுதியானவர்கள் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்துவின் டுவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்