Pagetamil
இலங்கை

வவுனியா தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டது!

வவுனியா, தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை மீறி 50 இற்கும் மேற்பட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், ஆலயத்தில் நின்ற 25 பேரினது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!