பாலியல் சக்தி குறையுமென்ற பயத்தில் தடுப்பூசிக்கு பம்மும் இளைஞர்கள்!

Date:

பாலியல் ஆற்றம் குறையும் என்ற தவறான கருத்தால் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால், பாலியல் ஆற்றல் குறைவடையும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை அடுத்தே, இளைஞர்களிடையே தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக கூறினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதால், பாலியல் ஆற்றல் குரைறவடைந்து மலட்டுத் தன்மையை அதிகரிக்கிறது என பொய்யான கட்டுக்கதைகள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.

இவ்வாறான கதை பரவியவுடன், இது தொடர்பான உலகலாவிய ஆராய்சிசிகளின் முடிவுகளை பார்த்தோம். அதில் அத்தகைய கருத்தோ அறிக்கையோ எங்கும் வெளியிடப்படவில்லை. எனவே, இதுவொரு கட்டுக்கதை ஆகும் என்றார்.

மேலும், மாணவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலைப்பாடு வந்துள்ளது. இதில் ஆரம்ப வகுப்பு, முன்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை. ஏனென்றால், சிறுவயது பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது குறைவு எனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்