யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவியின் விபரீத முடிவிற்கு காரணம் இதுவா?

Date:

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியை சேர்ந்த திருலிங்கம் சாருகா (22) என்பவரே நேற்று மதியம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.

அவரை காணவில்லையென தேடிய சகோதரன் தேடிய நிலையில் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும், உடனடியாக கயிற்றை அறுத்து வீழ்த்தி, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மாணவியின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். மாணவியின் தவறான முடிவிற்கு காரணம் எதுவும் வெளியாகவில்லை. கற்றல் சுமை காரணமாக இருக்கலாமென அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான அவர், அந்த பாடசாலையின் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். அந்தக் கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் 43வது அணி மாணவியாக கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்