திருகோணமலை நிலாவெளி 10ம் கட்டையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஓலையால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலாக விளங்கும் குறித்த ஹோட்டல் தீ விபத்தால் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குறித்த தீ விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் அருள் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான, ஓலையால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலுக்கே நேற்று (27) இரவு 8.30 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



