மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து அவர், 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற தலைவராக மாறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் போன்றவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டதுபோல, மஹிந்த ராஜபக்சவின் உடலையும் எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்படும் வகையில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந் நாடுகளின் தலைவர்கள், எவ்வளவு விலை கொடுத்தாலும், அத்தகைய தலைவர்கள் அவர்களின் மறைவுக்குப் பிறகும் எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதுபோன்று, மஹிந்த ராஜபக்சவின் புகழை நிலைத்து நிறுத்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் தனது கருத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்