மோசமான வீதிகளை கண்டுகொள்ளாமல், தரமான தார் வீதியை கிளறி மீண்டும் புனரமைப்பு: பளையில் சம்பவம்!

Date:

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட இன்றும் பல வீதிகள்
புனரமைக்கப்படாது மிக மோசமாக காணப்படும் நிலையில் பளை தம்பகாம் தார் வீதி
தற்போது காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுவது மிக மோசமான அபிவிருத்தி
நடவடிக்கை என பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் மாகாண வீதி மேம்பாட்டுத்
திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க
அமைச்சு உலக வங்கி மற்றும் இலங்கை அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 46,671,865.00 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு பளை தம்பகாமம் வீதி 2.5 கிலோமீற்றர் புனரமைக்கப்படுகிறது.

ஆனால் குறித்த வீதி ஏற்கனவே தார் வீதியாக புனரமைக்கப்பட்டு சேதமின்றி மிக
தரமான நிலையில் உள்ள போது அதனையே மீளவும் புனரமைக்கும் செயற்பாடு
மக்கள்மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இன்றுவரை புனரமைக்கப்படாத பல வீதிகள் காணப்படுகின்றன. இவ் வீதிகள் மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் நெருக்கடி மிக்க வீதிகளாக உள்ளன. இருந்த போது அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது தரமான தார் வீதியினை புனரமைக்க முன்மொழிந்த செயற்பாடுகள் கிளிநொச்சி அபிவிருத்தி செயற்பாடுகளின் நிலைமையினை வெளிப்படுத்துவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்