26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் பாலியல் தொழிலாளிக்கு கொரோனா தொற்று!

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களிற்கு முன்பாக வவுனியா பழையபேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல்தொழிலாளி ஒருவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும் குறித்த பெண் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அவரிடம் அண்மை நாட்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment