கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் செயலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொடிகாமத்தினைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் எழுமாற்றான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு கடந்த இரவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று பிரதேச செயலகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் மாதிரிகள் பெறப்படுகின்றன.
இந்நிலையில் உத்தியோகத்தர்களின் பிசிஆர் முடிவுகள் வெளிவந்த பின்னர் பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும், பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட மிக அவசியமான தேவைகளை அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.



