மன்னார் வீதி முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியேகத்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடமராட்சி வியாபாரிமூலையைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (28) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது மன்னார் முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.



