நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

Date:

நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்த நடிகை ட்விஷாவுக்​கும் மத்​திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த வழக்​கறிஞர் சமர்த் சிங்​குக்​கும் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பரில் திரு​மணம் நடை​பெற்​றது. இந்நிலையில் ட்விஷாவை ஆரம்​பம் முதலே கணவர் வீட்​டார் வரதட்​சணை கேட்டு கொடுமை செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி போபாலில் உள்ள வீட்​டில் ட்விஷா தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். அவரது மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக தந்தை நவ்​நீதி சர்​மா, தாய் ரேகா சர்மா குற்​றம் சாட்டி உள்​ளனர். இதுதொடர்​பாக ட்விஷாவின் தாய் ரேகா சர்மா கூறும்​போது, “மாமி​யார் வீட்​டில் நடந்த கொடுமை​களை எனது மகள் மொபைல்​போனில் விரி​வாக கூறி​யிருக்​கிறார். எப்​படி​யா​வது தன்னை வீட்​டுக்கு அழைத்​துச் செல்​லு​மாறு கெஞ்சினார்’’ என்றார்.

இந்த சூழலில் ட்விஷா​வின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்​கள் தற்​போது வெளி​யாகி உள்ளன. அவரது கை, காது, முகம், தோள் பட்​டைகளில் காயங்​கள் இருந்​தன. இந்த காயங்​கள் அவர் உயி​ரிழப்​ப​தற்கு முன்​பாக ஏற்பட்​ட​வை என அந்த அறிக்​கையில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. நடிகை ட்விஷா சர்​மா​வின் கடைசி நிமிட வீடியோ ஒன்று சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாக பரவி வரு​கிறது. அதில் போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா படியேறி மாடிக்கு செல்​கிறார்.

பின்​னர் அவரது உடலை கணவர் சமர்த் சிங் உள்​ளிட்ட 3 பேர் மாடிப் படி​யில் இருந்து கீழே தூக்கி வரு​கின்​றனர். இந்த வீடியோ குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர். இதுகுறித்து ட்விஷா​வின் உறவினர்​கள் கூறும்​போது, “தூக்​கில் தொங்கி ட்விஷா உயி​ரிழந்​த​தாக கணவர் குடும்​பத்​தினர் கூறுகின்​றனர். அப்​படி​யென்​றால் போலீ​ஸார் வரும் வரை உடலை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தி​யிருக்​கக் கூடாது.

ஆனால் ட்விஷா​வின் உடல் மாடி​யில் இருந்து கீழே கொண்டு வரப்பட்​டிருப்​பது வீடியோ​வில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. பல்வேறு தடயங்​களை கணவர் வீட்​டார் மறைத்​துள்​ளனர். மாமியார் கொடுமை தாங்​காமல் மூத்த மரு​மகள் ஏற்​கெனவே வீட்டை விட்டு வெளி​யேறி​விட்​டாள். எங்​கள் பிள்​ளையை கொலை செய்து விட்​டனர்’’ என்று குற்​றம் சாட்​டினர். ட்விஷா​வின் கணவர் சமர்த் சிங் தலைமறை​வாக உள்​ளார். அவரை பிடிக்க 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. அவரது ஜாமீன் மனுவை போபால் நீதிமன்​றம் தள்​ளு​படி செய்​திருக்​கிறது.

மாமி​யார் விளக்​கம்

ட்விஷா​வின் மாமி​யார் கிரி​பாலா ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: கடந்த ஆண்டு ட்விஷா எங்​கள் வீட்​டுக்கு வந்​தார். எனது மகன் சமர்த் சிங்கை காதலிப்​ப​தாகக் கூறி​னார். அப்​போது ஒழுக்​க​மான பெண் போன்று அவர் நடந்து கொண்​டார். ஆனால் திரு​மணத்​துக்​குப் பிறகு அவருக்கு போதைப் பொருள் பயன்​படுத்​தும் பழக்​கம் இருப்​பது தெரிய​வந்​தது. திரைப்படத் துறை​யில் இருந்​த​தால் அதே வாழ்க்கை முறையை வீட்​டிலும் பின்​பற்​றி​னார். கர்ப்​ப​மான நிலை​யில் கஞ்​சாவை புகைத்து வந்​தார்.

எனது கணவர் ராணுவத்​தில் பணி​யாற்​றி​னார். நாட்​டுக்​காக அவர் உயிரை தியாகம் செய்​தார். எனது மூத்த மகன் விமானப்​படையில் விங் கமாண்​ட​ராக பணி​யாற்றி வரு​கிறார். 2-வது மகன் சமர்த் சிங், கிரிமினல் வழக்​கறிஞர் ஆவார். நாங்​கள் பெயர், புகழோடு வாழும் குடும்​பம். எங்​கள் மீது பொய் குற்​றச்​சாட்​டு​களை சுமத்துகின்​றனர்​. எந்​த வழக்​கு, வி​சா​ரணை​யை​யும்​ சந்திக்கத்தயார். இவ்​வாறு கிரி​பாலா தெரிவித்​தார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...

மட்டக்களப்பு பொதுநூலகம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்