இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினைக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக பேசிய சீனா!

Date:

இந்தியா – சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் எல்லைப் பிரச்சினை உருவானது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இதையடுத்து இந்தியா – சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக இரு நாடுகளும் தெரிவித்தன. கடந்த ஓராண்டுகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னும் எல்லைப் பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் ஏராளமான வீரர்களை குவித்து வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையின் மூலக் காரணமே இந்திய ராணுவம் ஏராளமான வீரர்களை குவித்ததும், சீன எல்லைக்குள் ஆக்கிரமித்ததும்தான்.

எல்லைப் பிரச்சினையை இருதரப்பு உறவுடன் கோர்ப்பதை சீனா ஒப்புக்கொளவில்லை. சீனா தனது எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்தது வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே. மற்ற நாடுகளிடம் இருந்து ஆபத்து வாரமல் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்