இலங்கையில் சீரழியும் சட்டத்தின் ஆட்சி கனடா கவலை!

Date:

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவது குறித்து கனடா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் நேற்று (24) உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தை தாக்கல் செய்த இணை அனுசரணை நாடுகளில் ஒன்றான கனடா, இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு அச்சுறுத்தல், நினைவுச்சின்னங்கள் அழித்தல், நினைவுகூரும் உரிமை தடுக்கப்படல், மத சிறுபான்மையினரின் கட்டாய தகனங்கள் பொன்றவை சட்ட ஆட்சியின் சீர்குலைவை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் சமீபத்திய அறிக்கை இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று மார்க் கார்னியோ கூறினார்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கார்னியோ கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்